பல்லாங்குழி சாலையில் ஆபத்தான பயணம்!
கால்வாய் அடைப்புபல்லடம் நகராட்சி, நான்காவது வார்டு, குமரன் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது. அருகில் உழவர் சந்தை உள்ளது. கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.- சேகர், பல்லடம்.எரியாத விளக்குஅவிநாசி ரோடு, சி.எஸ்.ஐ., சர்ச் பின்புறம், இந்திரா நகர் இரண்டாவது வீதியில் ஒரு மாதமாக தெருவிளக்கு எரிவதில்லை. வீதி முழுதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.- சுப்பு, இந்திரா நகர். (படம் உண்டு)ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் ரயில்வே பாலத்தில் பத்துக்கு மேற்பட்ட தெருவிளக்குகள் எரிவதில்லை. பலமுறை புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்வதே இல்லை.- சங்கர்சதிஷ், ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)தவறான அறிவிப்பு?திருப்பூர், கருவம்பாளையம், எலிமென்டரி பள்ளி வீதியில் அறிவிப்பு பலகை தவறாக பிரின்ட் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி கவனிக்க வேண்டும்.- ராஜவேல், எஸ்.ஆர்., நகர். (படம் உண்டு)கழிவுநீர் தேக்கம்திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவக் கல்லுாரி எதிர்புறம், ஐ.டி.ஐ., ஸ்டாப்பில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பாதசாரிகள் நிற்க கூட வழியில்லாமல் உள்ளது.- ராஜேந்திரன், தாராபுரம் ரோடு. (படம் உண்டு)பல்லாங்குழி சாலைவீரபாண்டியில் இருந்து கோவில்வழி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. பாதி ரோடு மட்டும் உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- சத்தியபிரியா, கோவில்வழி. (படம் உண்டு)ஆத்துப்பாளையம் - அனுப்பர்பாளையம், மார்க்கெட் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.- விஜி, ஆத்துப்பாளையம். (படம் உண்டு)கால்வாய் அடைப்புதிருப்பூர், பெரிச்சிபாளையம், அன்னமார்கோவில் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.- மாரியப்பன், பெரிச்சிபாளையம். (படம் உண்டு)இப்படியா வைப்பது?அவிநாசி அருகே திருப்பூர் ரோடு, பை-பாஸ் ரோடு பாலத்தின் கீழ் பிளக்ஸ் பேனர்கள் வளைவில் வைக்கப்படுகிறது. வாகனங்கள் திரும்பும் போது, வேறு வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது.- ஜெய்சங்கர், அவிநாசி. (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருப்பூர், 23வது வார்டு, ஆர்.எஸ்.,புரம், செல்வவிநாயகர் கோவில் எதிர்புறம் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- பாண்டியராஜன், ஆர்.எஸ்.,புரம். (படம் உண்டு)-------------------------ரியாக் ஷன்முட்புதர் அகற்றம்திருப்பூர், 17வது வார்டு, எம்.எஸ்., நகர், நால்ரோட்டில் குடிநீர் தொட்டியை சுற்றி முட்புதர் வளர்ந்திருந்தது. 'தினமலர்' செய்தியை தொடர்ந்து, முட்புதர் அகற்றப்பட்டு விட்டது.- ரஞ்சித், எம்.எஸ்., நகர். (படம் உண்டு)குப்பை அகற்றம்திருப்பூர், 27வது வார்டு, வெங்கடேஸ்வரா நகரில் குப்பை தேங்கியிருப்பதாக, 'தினமலர்' நாளிதழ் செய்தியால், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பையை அகற்றி விட்டனர்.- ரவி, வெங்கடேஸ்வரா நகர். (படம் உண்டு)