உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தினமலர் - பட்டம் வினாடி - வினா போட்டி: சொன்னார்கள்... வென்றார்கள்! முருகு மெட்ரிக் பள்ளி மாணவியர் அபாரம்

 தினமலர் - பட்டம் வினாடி - வினா போட்டி: சொன்னார்கள்... வென்றார்கள்! முருகு மெட்ரிக் பள்ளி மாணவியர் அபாரம்

திருப்பூர்: 'தி னமலர்' நாளிதழ், மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்று, திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவர்களின் பகுத்தறிவு, சிந்தனையாற்றல் மற்றும் பொது அறிவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில், 'தினமலர்' சார்பில், 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. படிப்பின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்க மாணவர்களுக்காக 'தினமலர்' சார்பில் இதுபோன்ற வினாடி-வினா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி அளவில் இறுதி சுற்றில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். முருகு மெட்ரிக் பள்ளி அவ்வகையில், திருப்பூர், பி.என்.ரோடு, அண்ணா நகரில் உள்ள முருகு மெட்ரிக் பள்ளியில் நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் 260 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'ஏ' அணி வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த பிளஸ் 1 வகுப்பு மாணவி சாத்விகா மற்றும் எட்டாம் வகுப்பு மாணவி பூஜாஸ்ரீ ஆகியோர், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் மற்றும் இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளியின் தாளாளர் பசுபதி, பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ