உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண் வளம் காக்கும் தொழு உரம்

மண் வளம் காக்கும் தொழு உரம்

திருப்பூர் : மூலனுார், புஞ்சை தலையூரில், விவசாயிகளுக்கு மானாவாரி சாகுபடி பயிற்சி வழங்கப்பட்டது.தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:தற்போது கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாலும், பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடியும் குறைந்துவிட்டதாலும், மண்ணிற்கு தேவையான அங்கக சத்து கிடைப்பது குறைந்துவிட்டது; மண் வளமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மண் வளத்தை காக்க ஊட்டமேற்றிய தொழு உரமிட பரிந்துரைக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை, வேளாண் உதவி இயக்குனர் வசந்தி, வேளாண் அலுவலர் சாந்தி, துணை வேளாண் அலுவலர்கள் சின்னதம்பி, குமார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ