வாட்ச் கடையில் தீ; பொருட்கள் சேதம்
திருப்பூர்; திருப்பூரை சேர்ந்தவர் விஜய், 45. மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே வாட்ச் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் கடையை பூட்டி விட்டு, வெளியே சென்றிருந்தார். கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனே, தகவலறிந்து சென்ற திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில், அனைத்து விதமான வாட்ச்களும் எரிந்து போனது.