கணபதிபாளையம் அருகே உருவாகிறது கானகம்
திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், வெள்ளகோவில் கணபதிபாளையம் அடுத்துள்ள செம்மாண்டம்பாளையத்தில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. சக்திகுமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், தேக்கு -490, மகோகனி -100, இலுப்பை -100, சந்தனம் -5, பூந்திக்கொட்டை -50, புளி, செம்மரம், சொர்க்கம் தலா, 10 மரக்கன்றுகள் என, 775 மரக்கன்றுகள் நடப்பட்டன. வெள்ளகோவில் அடுத்துள்ள மயில்ரங்கம் பகுதியில், பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 200 சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டது.