பசுமைத் தோட்டம்; கிராமத்தின் நாட்டம்
திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், கடந்த, 2015ம் ஆண்டு முதல், 21 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தாண்டு நடந்து வரும், 10வது திட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.விவசாயிகள், தாங்களாக முன்வந்து, பயனுள்ள நாட்டு மரங்களை நட்டு வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மூலனுார் அடுத்த கோவில்புதுாரில், கோவிந்தசாமி, சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், சவுக்கு - 2,000, மகோகனி -130, செம்மரம் -100 என, 2,230 மரக்கன்றுகள் நடும் பணியை, உரிமையாளர் கோவிந்தசாமி குடும்பத்தினர் துவக்கி வைத்தனர். 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திட்டக்குழு தெரிவித்துள்ளது.