கோபி, பவானியில் கனமழை
கோபி: கோபியில் நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது. மாலை, 6:00 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. கோபி பஸ் ஸ்டாண்ட் சாலை, சத்தி சாலை, மொடச்சூர் சாலை, அத்தாணி சாலை, புதுப்பாளையம், மேட்டுவலவு உள்ளிட்ட பகுதியில், ஒரு மணி நேரத்துக்கு கனம-ழையாக கொட்டி தீர்த்தது. குள்ளம்பாளையம், நாதிபாளையம் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. * பவானி சுற்று வட்டார பகுதியில் நேற்றிரவு மிதமான மழை பெய்தது. இரட்டைக்கரடு, பருவாச்சி, செம்புளிச்சாம்பாளையம், காந்திநகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில், ௭:௩௦ மணிக்கு தொடங்கிய மழை, ௮:௩௦ மணி வரை பெய்தது. இதேபோல் வெள்ளித்திருப்பூர், மாத்துார், மரவபாளையம், ஆயமரத்-தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.