உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.1.5 கோடி செலவு செய்து தலைவரானேன்: தி.மு.க., பேரூராட்சி தலைவர் ஓபன் டாக்

ரூ.1.5 கோடி செலவு செய்து தலைவரானேன்: தி.மு.க., பேரூராட்சி தலைவர் ஓபன் டாக்

பல்லடம் : 'ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்துதான் பேரூராட்சி தலைவரானேன்,' என, தி.மு.க.,வை சேர்ந்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் பேசிய ஆடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுாகா, பேரூராட்சி தலைவராக இருப்பவர் விநாயகா பழனிசாமி. தலைவர் பதவிக்கு நடந்த மறைமுக தேர்தலில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். பின், தி.மு.க.,வில் இணைந்தார். இவருக்கும், தி.மு.க., வார்டு உறுப்பினர்கள் சிலருக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் உள்ளது. இந்நிலையில், தி.மு.க.,வை சேர்ந்த, 13வது வார்டு உறுப்பினர் பெரியசாமியுடன் விநாயகா பழனிசாமி பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், ''ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்துதான் பேரூராட்சி தலைவர் பதவிக்கு வந்தேன்,'' என கூறுகிறார். கூடவே, ''அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சாமிநாதனுடன் நெருக்கமாக இருப்பதால், யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது என்றும் கூறுகிறார். இது குறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ''நான் பெரியசாமி வீட்டுக்கு நேரில் சென்று பேசினேன். அதை யாரோ பதிவு செய்து, வெட்டி ஒட்டி வெளியிட்டுள்ளனர். தகவல் வெளியிட்டவர் மீது வழக்கு தொடர உள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

sugumar s
மார் 26, 2025 12:23

EVERYBODY GETS INTO POWER ONLY WITH THE POWER OF M. WHAT IS NEW THIS PERSON IS TALKING AND WHY THIS HAS TO BE AN ISSUE. THAT IS WHY THEY ARE MINTING MONEY IN VARIOUS PROJECTS. AS PEOPLE TAKE MONEY AND VOTE THEY HAVE NO RIGHT TO ASK THE CORRUPT POLITICIANS


Ramesh Sargam
மார் 26, 2025 11:42

இப்பொழுது அதை வசூலிக்க பல போக்கிரித்தனம் செய்வேன்.


தஞ்சை மன்னர்
மார் 26, 2025 10:52

தெரியாமத்தான் கேக்குறேன் இங்கே பி சே பி கும்பல் சும்மவா இருக்கு அதுவும் கோடி கணக்கில் செலவு செய்ய வைக்குது ஆனால் என்ன பண்ண அங்கே நோட்டாவை தாண்ட முடியவில்லை நாங்க அப்படி எல்லாம் இல்லை என்று சொல்ல சொல்லுங்க பார்ப்போம் அக்கா வானதி சொத்தை கணக்கு எடுத்தாலே தலை சுத்துது இந்த அஞ்சு வருஷத்தில் அக்காகிட்ட இருந்தது ஒரே ஒரு சைக்கிள் மட்டும்தான் மிக்சிக்கு due காட்டாமல் ஓடி வந்தவர் என்று இன்னமும் பேசிக் கொண்டு இருக்கின்றனர் பி சே பி கும்பல்


sankar
மார் 26, 2025 11:58

பணம் கொடுத்து பதவிக்கு வந்தவருக்கு ஒத்து ஊதல் - இருநூறு நல்லா வேலை செய்யுது


Keshavan.J
மார் 26, 2025 12:39

உருட்டு மகா உருட்டு, 200 ரூபீஸ் உருட்டு. பணம் சம்பாதிக்க இது ஒரு வகை.


Anand
மார் 26, 2025 10:41

இவனிடம் ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த அந்த ஏரியா மக்கள் நல்லதை எதிர்பார்க்க முடியுமா?


R.P.Anand
மார் 26, 2025 10:38

ஆன்லைன் வோட்டை கொண்டு வரட்டும். வயதானவர்கள் மட்டும் பூத்ல் வோட் போடட்டும்


saravanan
மார் 26, 2025 10:20

ரூ.1.5 கோடி செலவு செய்து, மக்களுக்கு சிறப்பான சேவை செய்ய வந்துள்ளார் ...நல்ல பிசினஸ். ஓட்டு போட்ட மக்களின் நிலமை ...திண்டாட்டம்.


Raj
மார் 26, 2025 10:07

பணம் போட்டு சம்பாதிப்பதற்கு இது ஒன்றும் வியாபாரக்களம் கிடையாது.


baala
மார் 26, 2025 09:21

எல்லா கேடுகெட்ட அரசியல்வாதிகளும் இப்படித்தான். மக்கள் தான் பாவம்.


S Sivakumar
மார் 26, 2025 08:09

இதுவே இன்றைய அரசியல் சாபக்கேடு காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்தால் உண்மையாக ஓட்டு போட வருவதில்லை. பணம் வாங்கியவர் மட்டுமே ஓட்டு போட்டால் இதுவே நிலைமை


sankaranarayanan
மார் 26, 2025 08:06

ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்துதான் பேரூராட்சி தலைவரானேன், கட்சியின் வண்டவாளம் எப்படி அன்று மக்களே பாருங்கள் இப்படித்தான் வரும் மாநில தேர்தலில் ஒவ்வொரு திராவிட மாடல் கட்சி பிரமுகர்களும் சொல்லி சொல்லி மக்களை முட்டாளாக்கி திரும்பவும் ஆட்சியில் அமற பார்ப்பார்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்


முக்கிய வீடியோ