மேலும் செய்திகள்
மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
07-Feb-2025
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். கண், காது மூக்கு தொண்டை, மனநலம், எலும்புமுறிவு, நரம்பியல் மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்புகளை பரிசோதித்தனர். மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. நேற்றைய முகாமில், புதிதாக 48 மாற்றுத்திறனாளிகளுக்கும்; 22 பேருக்கு அடையாள அட்டை புதுப்பித்து வழங்கப்பட்டது.
07-Feb-2025