உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் பொருத்துங்க

அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் பொருத்துங்க

உடுமலை; திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. அங்குள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தின் வழியாக, தென் மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இப்பாலத்தில் போதிய மின்விளக்குகள், பிரதி பலிப்பான் இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இவ்வழியாக செல்லும் பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, பொதுப்பணித்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் மின்விளக்குகள், பிரதிபலிப்பான் பொருத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை