உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கண்காணிப்பு கேமரா அமைப்பது அவசியம்

 கண்காணிப்பு கேமரா அமைப்பது அவசியம்

உடுமலை: உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா அமைக்க, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை வழியாக, தற்போது, கோவை - மதுரை, திருவனந்தபுரம் - ராமேஸ்வரம், பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. உடுமலையிலிருந்து தென் மாவட்ட நகரங்களுக்கு செல்ல, தினமும் ஏராளமான மக்கள் ரயிலில் செல்கின்றனர். குறிப்பாக, பண்டிகை, திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கானோர் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு செய்யவும், டிக்கெட் எடுக்கவும், தினமும் நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர். ஆனால், இங்கு கண்காணிப்பு கேமரா அமைக்கப்படவில்லை. இதை அமைக்க வேண்டும் என, பயணியர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, பயணியரின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையிலும், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி