கே.எஸ்.சி., பள்ளி நுாற்றாண்டு விழா கொண்டாட ஆலோசனை
திருப்பூர்; திருப்பூர், கே.எஸ்.சி.,அரசு மேல்நிலைப்பள்ளியில் நுாற்றாண்டு விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். பிப்., மாதம் பள்ளியில் நுாற்றாண்டு விழா நடத்துவது, இதற்காக பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைப்பது என கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.