ரத்த தான சேவை அமைப்புக்கு பாராட்டு
திருப்பூர்: தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு, சிறந்த முறையில் ரத்த தான சேவையில் ஈடுபட்டு வரும் தன்னார்வ அமைப்பினர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்று மற்றும் விருது வழங்கப் படுகிறது. இதில், நம்பிக்கை அமைப்புக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ், விருது வழங்கினார். நம்பிக்கை அமைப்பு நிறுவனர் ரஹீம் அங்குராஜ், மாவட்ட தலைவர் ரஹீம், நகர தலைவர் சையது அபுதாகிர் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.