மேலும் செய்திகள்
பாதாள பெருமாள் கோவிலில் கும்பாபி ேஷக கோலாகலம்
16-Nov-2024
மாலையம்மன் கோவிலில் மகா கும்பாபிேஷகம்
09-Nov-2024
திருப்பூர்,: திருப்பூர், மண்ணரை, பாவடிக்கல் வீதியிலுள்ள பட்டத் தரசியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் நடைபெற்றது. கும்பாபி ேஷக விழா, கடந்த 4ம் தேதி, விநாயகர் பூஜை, கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மண்ணரை முத்துமாரியம்மன் கோவிலிருந்து தீர்த்தக்குடம், முளைப்பாலிகை எடுத்து வந்து சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து யாக சாலை பூஜை, எண் வகை மருந்து சாத்தும் நிகழ்ச்சி ஆகியன நடந்தன. நேற்று அதிகாலை, யாக சாலை பூஜையும், கலசயாத்திரையும், தொடர்ந்து கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இவற்றில் திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர், இளைஞர் அணியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
16-Nov-2024
09-Nov-2024