விநாயகர் கோவிலில் 11ல் கும்பாபிேஷகம்
உடுமலை; உடுமலை யு.கே.சி., நகர் கிணத்தடி விநாயகர் கோவிலில் வரும் 11ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது. உடுமலை யு.கே.சி., நகரில் கிணத்தடி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷக விழா சிறப்பு பூஜைகள் வரும் 9ம்தேதி முதல் விநாயகர் வழிபாட்டுடன் துவங்குகிறது. தொடர்ந்து மகாலட்சுமி யாகம், நவக்கிரக யாகம் நடக்கிறது. 10ம் தேதி வாஸ்து சாந்தி, ரக்சா பந்தனம், மகா பூர்ணா ஹு தி நடக்கிறது. மாலையில் முதற்கால யாகபூஜை நடக்கிறது. வரும் 11ம் தேதி இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. காலை, 9:30 மணி முதல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. சிறப்பு அபிேஷகத்துடன் சுவாமிக்கு அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.