உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிமங்கலத்தில் 31ல் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

குடிமங்கலத்தில் 31ல் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

உடுமலை : உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், வரும், 31ம் தேதி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடக்கிறது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, குடிமங்கலம் வட்டார வள மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றின் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம், வரும், 31ம் தேதி, காலை, 9:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.இம்முகாமில் பிறப்பு முதல், 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். 10 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களை நல வாரியத்தில் பதிவு செய்யப்படும்.புதிய தேசிய அடையாள அட்டை பெறுதல் மற்றும் புதுப்பித்தல், யு.டி.ஐ.டி., பதிவு செய்தல், பஸ், ரயில் பயணச் சலுகை பாஸ், இலவச அறுவை சிகிச்சை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவது குறித்து பரிந்துரை செய்யப்படும்.பெற்றோர்கள் இம்முகாமிற்கு வரும்போது, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் -5, ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு, குடிமங்கலம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி