புதிய மாநகர் நல அலுவலர்
திருப்பூரில் பணியாற்றிய மாநகர் நல அலுவலர் கவுரி சரவணன், சமீபத்தில் கரூருக்கு இட மாறுதல் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக கலைச்செல்வன் பொறுப்பு அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சியில் பணியாற்றிய முருகானந்தம் திருப்பூர் மாநகராட்சி மாநகர் நல அலுவலராக மாற்றப்பட்டு, பொறுப்பேற்றார். புதிதாகப் பொறுப்பேற்ற அவருக்கு மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் (பொறுப்பு) சுல்தானா மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.