மின் நுகர்வோர் மனுக்கள் மீது 15 நாளில் தீர்வு காண உத்தரவு
திருப்பூர்; திருப்பூர் குமார் நகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த மின் நுகர்வோர் சிறப்பு முகாமிற்கு, செயற்பொறியாளர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், 'திருப்பூர் கோட்ட அளவில் நடந்த முகாமில், 96 மனுக்கள் பெறப்பட்டது. ஏழு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்பட்டது; பிற மனுக்கள் மீது, 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மற்ற மின் கோட்டங்களுக்கு உட்பட்ட நான்கு மனுக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.