எஸ்.கே.எல்., பள்ளியில் ஓவிய கண்காட்சி
திருப்பூர்: அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாம்பாளையத்திலுள்ள எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஓவிய கண்காட்சி நடைபெற்றது. பள்ளி செயலாளர் அனுராகவி கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். மாணவ, மாணவியரின் கை வண்ணத்தில் உருவான ஓவியங்கள், கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. பள்ளி தாளாளர் ராதாமணி, முதல்வர் மீனாட்சி உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், ஓவியங்களை பார்வையிட்டு. மாணவ, மாணவியரை பாராட்டினர்.