மேலும் செய்திகள்
முக்கிய பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரையின்றி அவதி
06-May-2025
உடுமலை; உடுமலை, தளி ரோடு மேம்பாலம் அருகே, பஸ் நிறுத்தம் அமைப்பதற்கு பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, தளி ரோடு மேம்பாலத்தின் அருகில், காந்தி சவுக், சிங்கப்பூர் நகர், பத்ரகாளியம்மன் லே-அவுட், உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. மாணவியருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றும் உள்ளது.இப்பள்ளியில், ஆயிரத்துக்கும் அதிகமான மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு பஸ்சில் வரும் மாணவியர், ரயில்வே ஸ்டேஷன் அல்லது முதற்கிளை நுாலக பஸ் நிறுத்தத்திலிருந்து நடந்து வர வேண்டும்.காலை நேரங்களில், கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து வரும் குழந்தைகள், மீண்டும் நடந்து பள்ளிக்கு செல்வதில் சோர்வடைகின்றனர்.பள்ளி நேரங்களில் மட்டும், மேம்பாலம் அருகே பஸ்களை நிறுத்த, போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
06-May-2025