உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 8978 பேருக்கு பட்டாக்கள்

8978 பேருக்கு பட்டாக்கள்

திருப்பூர்:காங்கயம் மற்றும் ஊதியூர் பகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, காங்கயம் அடுத்த காடையூர் சிவசக்தி மகாலில் நடந்தது. அமைச்சர் சாமிநாதன், காங்கயம் மற்றும் ஊதியூர் பகுதியைச் சேர்ந்த 796 பயனாளிகளுக்கு, வீட்டு மனைப்பட்டாக்களும், 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கி பேசினார். அமைச்சர் பேசியதாவது: கடந்த நான்காண்டுகளில், திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில், 1,065 (நத்தம்) இலவச வீட்டு மனைப் பட்டா; 739 ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் புதிய பட்டா; 4,693 ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இணையவழி பட்டா மற்றும் 894 பிற் படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் இணைய வழி பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட 1,587 பட்டாக்கள் கிராம கணக்கில் மாறுதல் செய்து வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில் மொத்தம் 8,978 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை