உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாளை (19 ம் தேதி) நடைபெறுகிறது. கலெக்டர் அலுவலகம், அறை எண்: 439ல் நடைபெறும் இம்முகாமில், தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தேவையான பணியாளர்களை தேர்வு செய்கின்றன. நிறுவனங்களால் வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, முகாமிலேயே பணி நியமன கடிதம் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., - டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம். முகாமில் கலந்துகொள்ளும் வேலை தேடுவோர், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுய தகவல் படிவம் ஆகியவற்றை கொண்டு செல்லவேண்டும். முகாமில் பங்கேற்கும் வேலை அளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடுவோரும், https://www.tnprivatejobs.tn.gov.inஎன்கிற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும், என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை