உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

உடுமலை: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாளை (31ம் தேதி), காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, திருப்பூர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக மையம் (அறை எண்: 439)ல் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்கள், இம்முகாமில் பங்கேற்று, தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில், 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம். முகாமில் கலந்து கொள்ள, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 94990 55944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி