மழைநீர் தேக்கம்: கொசு உற்பத்தி அதிகரிப்பு
பொங்கலுார்: புரட்டாசி இறுதியிலிருந்து மழை பெய்து வருகிறது. பொங்கலுார் பகுதியில் பருவ மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் உள்ள மண் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. தண்ணீர் இயற்கையாகவே சில இடங்களில் தேங்கி நிற்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. எல்லா இடங்களிலும் புல்வெளிகள் வளரத் துவங்கி உள்ளதாலும், வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதாலும் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. கொசுக்கடியால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.