ரேக்ளா பந்தயம் 300 வண்டிகள் களம்
உடுமலை; குடிமங்கலம் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், ரேக்ளா பந்தயம் சுங்காரமுடக்கில் நடந்தது.பந்தயத்துக்கு, குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் முரளி தலைமை வகித்தார். விஷ்ணுகார்த்திகேயன் வரவேற்றார்.பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 300க்கும் அதிகமான ரேக்ளா வண்டிகள் பந்தயத்தில் பங்கேற்றன. இதில், பந்தயதுாரத்தை குறைவான நேரத்தில் கடந்த, ரேக்ளா காளைகளுக்கும், உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.