மேலும் செய்திகள்
50 சிறப்பு பஸ்கள் இயக்கம்
29-Oct-2024
சிறப்பு அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைப்பு
19-Oct-2024
திருப்பூர்; இந்த வாரம் சிறப்பு பஸ் இயக்கம் குறைக்கப்பட்டதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒவ்வொரு வார இறுதி நாட்களும் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, சிறப்பு பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்குகிறது. வழக்கமாக, வெள்ளி இரவு துவங்கி, சனி இரவு, ஞாயிறு நாள் முழுதும், திருப்பூரில் இருந்து, 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.தீபாவளி பண்டிகை முடிந்து ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ளது; வெளியூர், சொந்த மாவட்டம் சென்ற பலர் தற்போது தான் திரும்பியுள்ளனர். எனவே, நடப்பு வாரம் வாராந்திர சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை, 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், கோவில்வழி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, தலா, பத்து பஸ் இன்றும், நாளையும் இயங்கும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
29-Oct-2024
19-Oct-2024