உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு

ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு

உடுமலை; உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையானது, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. இந்த நெடுஞ்சாலையில், உடுமலை நகரப்பகுதியில், அதிகளவு ஆக்கிரமிப்புகள் உள்ளது.இது குறித்து, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், நகரப்பகுதியில், 5 கி.மீ., தொலைவுக்கு, வரும், 15 ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. அதற்கு முன், ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான செலவினங்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை