ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
உடுமலை; உடுமலை உழவர் சந்தை ரோட்டில், காலை நேரங்களில் போடப்படும் தற்காலிக கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகே, உழவர்சந்தை அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான விவசாயிகளும், பொதுமக்களும் வருகின்றனர். உழவர்சந்தை முன் காலை, நேரங்களில் ரோட்டோர காய்கறி கடைகள் போடப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற,நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.