மேலும் செய்திகள்
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
08-Oct-2024
திருப்பூர்: திருப்பூர், காந்தி நகர், ஏ.வி.பி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் கொங்கு சகோதயா சி.பி.எஸ்.இ., கூட்டமைப்புப் பள்ளிகளுக்கு இடையிலான இறகுப்பந்துப்போட்டி நடந்தது. இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஏ.வி.பி., கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பொருளாளர் லதா கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கிவைத்தார். பள்ளி முதல்வர் ராஜேஷ் வரவேற்றார்.மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் கார்த்திகேயன், லதா கார்த்திகேயன் ஆகியோர், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக்கோப்பைகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் முரளி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வித்துறை இயக்குனர் மோகன்ராஜ், கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகனா, கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.
08-Oct-2024