உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விற்பனைக் கூடத்தில் ரூ.1 லட்சம் எள் ஏலம்

விற்பனைக் கூடத்தில் ரூ.1 லட்சம் எள் ஏலம்

வெள்ளகோவில் : முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 1.01 லட்சம் ரூபாய்க்கு எள் ஏலம் நடந்தது.முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் எள் ஏலம் நடப்பது வழக்கம். சுற்றுவட்டார விவசாயிகள், ஒன்பது பேர் பங்கேற்றனர்.விவசாயிகள் தாங்கள் விளைவித்த, 1,095 கிலோ (15 மூட்டையில்) எள்ளை கொண்டு வந்தனர்.இதில், ஒரு கிலோ 82.36 முதல் 112 ரூபாய் வரை ஏலம் போனது. சராசரியாக, 110.20 ரூபாய்க்கு விற்றது.மொத்தம், 1,095 கிலோ எள், ஒரு லட்சத்து, ஆயிரத்து, 572 ரூபாய்க்கு ஏலம் நடந்ததாக ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி