உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஷண்முகானந்த சங்கீதா சபாவின் 18வது ஆண்டு இசை அமுதம்

ஷண்முகானந்த சங்கீதா சபாவின் 18வது ஆண்டு இசை அமுதம்

திருப்பூர்; திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில், 18வது ஆண்டு 'இசை அமுதம் -2024' நிகழ்ச்சி, வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடக்கிறது.திருப்பூர், யுனிவர்சல் தியேட்டர் ரோட்டிலுள்ள ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடக்க உள்ள 'இசை அமுதம்' நிகழ்ச்சியில், 7ம் தேதி மாலை, 6:30 மணிக்கு, சென்னை கோமல் தியேட்டர் வழங்கும், திரவுபதி மேடை நாடகம் நடக்கிறது. 8ம் தேதி மாலை, 6:30 மணிக்கு, திருச்சூர் அனுரூப் மற்றும் கங்கா சசிதரன் இணைந்து வழங்கும் வயலின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.இவர்கள், எம்.எஸ்., சுப்புலட்சுமி விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிருதங்கம் - முத்துக்குளம் ஸ்ரீராக், தவில் - திருப்புனித்துரா ஸ்ரீகுமார், கடம் -மாஞ்சூர் உன்னிகிருஷ்ணன் குழுவினர் பங்கேற்ற உள்ளனர். மேடை நாடகம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சியில், இசைப்பிரியர்கள் பங்கேற்க வேண்டுமென, ஷண்முகானந்த சங்கீத சபா நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை