உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு வரும் 16ல் சிறப்பு கல்வி கடன் முகாம்

மாணவர்களுக்கு வரும் 16ல் சிறப்பு கல்வி கடன் முகாம்

உடுமலை; திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்க சிறப்பு கல்விக்கடன் முகாம் வரும் 16ம் தேதி, காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அறை எண் 20ல் நடக்கிறது. கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், www.pmvidyalaxmi.co.inஎன்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாம் நடக்கும் நாளன்று விண்ணப்பத்தின் நகல், மாணவர், பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கிக்கணக்கு புத்தக நகல், ஆண்டு வருமானச் சான்று நகல், சாதிச் சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்விக் கட்டண விபரம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் இளநிலை பட்டப் படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு வாயிலாக, பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை, 0421 -2971185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ