பாறைக்குழியில் மூழ்கி மாணவன் பலி
அனுப்பர்பாளையம்: ஊத்துக்குளி அடுத்த செம்மியம்பாளையத்தை சேர்ந்த பனியன் தொழிலாளி தினேஷ் மகன் லோகேஷ், 15. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.விடுமுறை நாளான நேற்று சக நண்பர்களுடன் அருகில் உள்ள பாறைக் குழிக்கு குளிக்க சென்றார். ஆழமான பகுதியில் சிக்கினார்.நீச்சல் தெரியாததால் தண்ணீரில் முழ்கி இறந்தார். குன்னத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.