உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அபார திறன் காட்டி அசத்திய மாணவர்கள்; தினமலர் - பட்டம் வினாடி- வினாவில் உற்சாகம்

அபார திறன் காட்டி அசத்திய மாணவர்கள்; தினமலர் - பட்டம் வினாடி- வினாவில் உற்சாகம்

திருப்பூர்; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி - வினா போட்டியின் வாயிலாக, அறிவாற்றலை வளர்த்துக் கொள்வதில் மாணவர்கள் காண்பித்த ஆர்வம் வெளிப்பட்டது.புத்தக படிப்புடன் மாணவர்களுக்கு பொது அறிவு உள்ளிட்ட கற்றல் சார்ந்த தேடலை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்களை தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் வகையிலும் கடந்த, 2018 முதல், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், 'வினாடி வினா' போட்டி நடத்தப்படுகிறது.இந்தாண்டுக்கான வினாடி - வினா விருது, '2024 -25 போட்டி, 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடந்து வருகிறது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் கை கோர்த்துள்ளது. சத்யா ஏஜென்சிஸ் இணைந்து நடத்துகிறது.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்படுகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர் இடையே அரையிறுதி போட்டி நடக்கும். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி போட்டி நடத்தப்பட இருக்கிறது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.திருப்பூர், அவிநாசி ரோடு, ராக்கியாபாளையம், மகாலட்சுமி நகரில் உள்ள திருப்பூர் பப்ளிக் மெட்ரிக் பள்ளியில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. தகுதி சுற்றுக்கான போட்டியில், 91 மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், ஆங்கில அகர வரிசையில், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். அவர்களுக்கு இடையே வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில், 'பி' அணியில் இடம் பெற்ற, 7ம் வகுப்பு மாணவர் சுஜின், ரக்ஷித் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் யமுனா, பள்ளி நிர்வாக அலுவலர் கவியரசு ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை