மானிய விலையில் ஜிப்சம் வினியோகம்
உடுமலை,; பயிர்களுக்கு தேவையான ஜிப்சம் உரம், வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. பயிர்களுக்கு உரங்கள் முக்கிய தேவையாக உள்ளது. உடுமலை வட்டாரம், குறிச்சிக்கோட்டை, சாளையூர் வேளாண் விரிவாக்க மையங்களில், பயிர்களுக்கு தேவையான ஜிப்சம் தேவையான அளவு இருப்பு உள்ளது.மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதால், விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.