மேலும் செய்திகள்
திருமுறை இசை கச்சேரியுடன் தேர்த்திருவிழா
03-Jul-2025
திருப்பூர்; தேரோட்டம் வரும் 10ம் தேதி நடப்பதையொட்டி, நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில் களைகட்டியுள்ளது.நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி - விசாலாட்சி அம்மன் கோவில் ஆனித் தேர்த் திருவிழா, 4ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.மூன்றாவது நாளான நேற்று காலை, அபிஷேகம், அலங்கார பூஜை, சுவாமி வீதியுலா நடைபெற்றன; இரவு 7:00 மணிக்கு ராவணேஸ்வர வாகனத்தில் சோமாஸ்கந்தர் வீதி உலா வந்து, அருள்பாலித்தார்.தேர்த்திருவிழாவின் ஒரு பகுதியாக, மாலையில் மேடை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நேற்று, உடுமலை அய்யாசாமி குழுவினரின், திருவாசகம் இசை கச்சேரி நடைபெற்றது.நான்காவது நாளான இன்று இரவு, அதிகார நந்தி வாகன காட்சி; நாளை, மூஷிகம், மயில், ரிஷபம், காமதேனு வாகன காட்சியுடன் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது. நாளை மறுநாள், மாலை, 6:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும், யானை வாகன காட்சியும் நடைபெறுகின்றன.வரும் 10ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, கைலாய வாத்தியம், கும்மி, பெருஞ்சலங்கை ஆட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டத்துடன், தேர்த்திருவிழா நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, வரும் 13ம் தேதி வரை, தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் யாக பூஜைகள் நடைபெறும்.
03-Jul-2025