உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  திருக்குறள் முற்றோதுதல் : மாணவி தனுஸ்ரீ அசத்தல்

 திருக்குறள் முற்றோதுதல் : மாணவி தனுஸ்ரீ அசத்தல்

திருப்பூர்: தளவாய் பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி நான்காம் வகுப்பு மாணவி தனுஸ்ரீ, 1330 திருக்குறளையும் ஒப்புவித்து அசத்தினார். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 1,330 திருக்குறளையும் முற்றோதும் திறன் கொண்ட, மாணவ, மாணவியரை கண்டறிந்து, ஆண்டுதோறும் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுவருகிறது. திருக்குறள் முழுமையும் மனனம் செய்து, ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு, தலா 15 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று, திருக்குறள் முற்றோதும் திறனாய்வு நேற்று நடைபெற்றது. மாணவ, மாணவியர் 17 பேர் பங்கேற்று, திருக்குறள் ஒப்புவித்தனர். சிறந்தமுறையில் ஒப்புவித்த, தாராபுரம் தாலுகா, தளவாய்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவி தனுஸ்ரீ, பரிசு தொகைக்கு பரிந்துரைக்கப்பட்டார். திருக்குறள் ஒப்புவித்தல் திறனாய்வில் பங்கேற்ற, மாணவ, மாணவியரை, கலெக்டர் மனிஷ் நாரணவரே பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ