கடையடைப்பு - ஸ்தம்பித்த திருப்பூர்
சொத்து வரி உயர்வு, வணிக கட்டடங்கள் வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., ஆகியவற்றை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, திருப்பூரில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.பிரதான ரோடுகள் அனைத்திலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.ஊத்துக்குளி ரோடு, பி.என்., ரோடு, மாநகராட்சி அலுவலக ரோடு, தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு, மத்திய பஸ் ஸ்டாண்ட், பல்லடம் ரோடு, அரிசி கடை வீதி ஆகியவற்றில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.