உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் பஸ் விபத்து மாணவர் மூளைச்சாவு

திருப்பூர் பஸ் விபத்து மாணவர் மூளைச்சாவு

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அடுத்த பல்லகவுண்டம்பாளையம், சாம்ராஜ்பாளையம் பிரிவு பகுதியில், நேற்று முன்தினம் அதிவேக தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்தனர். மாணவ ---- மாணவியர் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.ஊத்துக்குளி அருகே ஊமச்சி வலசு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து -- அனிதா தம்பதி மகன் குருராஜ், 18, பெருந்துறை கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.காம்., படித்து வந்தார். விபத்தில் படுகாயமடைந்த குருராஜ், நேற்று மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன துயரமான சூழலிலும், மகனின் உடல் உறுப்புகளை தானம் அளித்த குருராஜின் பெற்றோரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ