மேலும் செய்திகள்
சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்
23-Apr-2025
உடுமலை; உடுமலை சந்தை ரோட்டில், சரக்கு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமிப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.உடுமலை நகரிலுள்ள முக்கிய ரோடுகளில் ஒன்றாக சந்தை ரோடு உள்ளது. தினசரி சந்தைக்கு செல்வதற்கு ஒரு பிரதான வழி மட்டுமே இருப்பதால், சரக்கு வாகனங்கள் அவ்வழியை பயன்படுத்துகின்றன.இதனால் சந்தைக்கு வரும் சரக்கு வாகனங்கள், அந்த ரோட்டையும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.காலையிலும், மாலையிலும் சந்தைக்கு காய்கறி மற்றும் இதர பொருட்கள் ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் வரிசையாக வளாகத்திற்குள் நுழைவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. இதனால் அப்பகுதியில் மற்ற வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.மேலும், பணிக்கு செல்வோர், கல்லுாரி, பள்ளிக்கு செல்வோரும் இதனால் காலை, மாலை நேரங்களில் பாதிக்கப்படுகின்றனர்.இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டம் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
23-Apr-2025