திருச்சி ரயில் கரூர் வரை மட்டும்
திருப்பூர்; கரூர் - திருச்சி மார்க்கத்தில், வீரராக்கியம் - மாயனுார் ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் பாலம் பராமரிப்பு பணி நடக்கிறது.இதனால், இன்றும், வரும், 26 மற்றும், 29ம் தேதியும் பாலக்காடு - திருச்சி ரயில் (எண்: 16844) கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.சித்தலவாய், குளித்தலை, பெட்டவாய்த்தலை, திருச்சி கோட்டை, திருச்சி ஜங்ஷன்செல்லாது.அதேநேரம், திருச்சி - பாலக்காடு (எண்:16843) ரயில் இயக்கத்தில் மூன்று நாட்கள் எந்த மாற்றமும் இல்லை; வழக்கமான வழித்தடத்தில் இயங்கும்.