உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வங்கதேச நபர்களுக்கு இரண்டாண்டு சிறை

வங்கதேச நபர்களுக்கு இரண்டாண்டு சிறை

திருப்பூர்: உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்க தேசத்தைச் சேர்ந்த இருவருக்கு, இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.திருப்பூர், முத்தணம்பாளையம் பகுதியில் கடந்தாண்டு மே மாதம் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த இருவரை நல்லுார் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்த பைசல் அகமது, 28 மற்றும் நஷ்ருல் இஸ்லாம், 29, என்பதும், இவர்கள் இருவரும் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்வதும் தெரிந்தது.அவர்களிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்த உரிய ஆவணங்களும் இல்லை. உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் ஊடுருவி திருப்பூரில் தங்கி பணியாற்றியது தெரிய வர, போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுகுறித்த வழக்கு, திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த பைசல் அகமது, நஷ்ருல் இஸ்லாம் இருவருக்கும் தலா 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், சிறை தண்டனை முடிந்ததும் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பவும் உத்தரவிட்டு நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு வக்கீல் பூமதி ஆஜரானார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட நல்லுார் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ