உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராம மக்கள் பாதிப்பு

கிராம மக்கள் பாதிப்பு

உடுமலை; உடுமலை கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, புறநகர் மற்றும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். இது மட்டுமல்லாமல் மாணவ, மாணவியரும் பள்ளிகளுக்கு செல்ல பஸ்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், உடுமலை பகுதியிலுள்ள கடைகோடி கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் தற்போது இயக்கப்படும் பஸ்களில், மக்கள் முண்டியடித்து ஏறி, இடமின்றி தொங்கிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. விபத்தகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ்களை கிராமங்களுக்கு இயக்க வேண்டும் என, பல்வேறு கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை