போதிய பஸ்கள் இன்றி கிராம மக்கள் தவிப்பு
உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, பல்வேறு நகரங்கள், கிராமங்களுக்கு புறநகர், டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஏராளமான மக்கள் செல்கின்றனர். ஆனால், உடுமலை பகுதியில் கடைகோடி கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால், இயக்கப்படும் குறைந்த அளவிலான பஸ்களில், மக்கள் தொங்கிக்கொண்டும், ஆபத்தான முறையிலும் பயணம் செய்து வருகின்றனர். இதுகுறித்து, பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, உடுமலை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ்களை கிராமங்களுக்கு இயக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.