உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வலர் துாய்மை  பணி 

மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வலர் துாய்மை  பணி 

திருப்பூர்; காங்கயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வலர்கள் துாய்மை பணிகள் மேற்கொண்டனர். பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் சேவை வாரம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காங்கயம், வேர்கள் அமைப்பு சார்பில், காங்கயம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அவ்வளாகத்தில் உள்ள புதர்கள், செடி கொடிகள் அகற்றும் பணியில் வேர்கள் அமைப்பினர் ஈடுபட்டனர். இதில் வேர்கள் அமைப்பைச் சேர்ந்த வெங்கடேஷ், சங்கரகோபால், மோகன், சிவகுமார் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி