ரூ.1.78 கோடியில் பணிகள் துவக்கம்
திருப்பூர்: திருப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், புதிய திட்ட பணிகள் துவக்க விழா நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் முன்னிலைவகித்தார். அமைச்சர் சாமிநாதன், புதிய திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.கணக்கம்பாளையம், காளிபாளையம் ஊரட்சிகளில் தார், கான்கிரீட் சாலை பணிகள்; புதுப்பாளையம் செந்தில் நகரில் ரேஷன் கடை கட்டடம்; அறிவொளிநகர் சமத்துவ சுடுகாடு பகுதியில், காத்திருப்பு கூடம் அமைத்தல்; பெருமாநல்லுார் ஊராட்சி, கே.ஆர்., நகர் பகுதியில் சாலை மேம்பாடு என, மொத்தம் ரூ.1.78 கோடி மதிப்பிலான 18 திட்ட பணிகள் துவக்கிவைக்கப்பட்டுள்ளன.