உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / பள்ளி மாணவனுடன் திருமணம்: கல்லுாரி மாணவி மீது வழக்கு

பள்ளி மாணவனுடன் திருமணம்: கல்லுாரி மாணவி மீது வழக்கு

வந்தவாசி: பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லுாரி மாணவி மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 16 வயது சிறுவன் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். மற்றொரு கிராமத்தை சேர்ந்த, 19 வயது மாணவி, அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். இருவரும் நெருங்கி பழகிய நிலையில், வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். மாணவி, தற்போது மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்து சமூகநலத் துறைக்கு சென்ற புகார்படி, வந்தவாசி வட்டார சமூகநலத் துறை விரிவாக்க அலுவலர் ஜீவா விசாரணை நடத்தினார். இதில், பள்ளி மாணவனை, மாணவி ரகசிய திருமணம் செய்ததும், அதில் மாணவி கர்ப்பமாக இருப்பதும் உறுதியானது. வந்தவாசி போலீசார், அந்த மாணவி மீதும், பள்ளி மாணவனின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை