மகளை காதலித்த வாலிபரை அடித்து கொன்ற தந்தை சரண்
ஆரணி: ஆரணி அருகே தன் மகளை காதலித்த வாலிபரை, அடித்த கொன்ற தந்தை போலீசில் சரணடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூர் அனந்தபுரத்தை சேர்ந்தவர் வடிவேலன், 27; கூரியர் நிறுவன ஊழியர் . திருமணமாகி மனைவியை பிரிந்தவர். களம்பூரை அடுத்த முக்குறும்பையை சேர்ந்தவர் விவசாயி சங்கர், 42. இவரது, 16 வ யது மகளான பிளஸ் 1 மாணவியை வடிவேலன் காதலித்துள்ளார். சங்கர் கண்டித்தும் இருவரும் காதலை தொடர்ந்தனர். ஆத்திரமடைந்த சங்கர், நேற்று முன்தினம் பைக்கில் முக்குறும்பை வழியாக சென்ற வடிவேலனை வழிமறித்து தாக்கினார். மயங்கி விழுந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர், ஏற்கனவே இறந்தது தெரிந்தது. வடிவேலனின் உறவினர்கள், களம்பூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, ஆரணி - திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி, மறியலை கைவிட செய்தனர். இந்நிலையில், களம்பூர் போலீஸ் ஸ்டேஷனில், சங்கர் நேற்று சரணடைந்தார்.