புல்லட் மீது கார் மோதி 2 வாலிபர்கள் உயிரிழப்பு
மணப்பாறை:திருச்சி மாவட்டம், வீரப்பூர் அருகே உள்ள காட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ், 34; கூலித்தொழிலாளி. இவரிடம், மரவனுார் அருகே உள்ள சமுத்திரத்தைச் சேர்ந்த பாலா, 32, மதன்பாபு வேலை பார்த்தனர்.நேற்று முன்தினம் இரவு, சதீஷ், பாலா, மதன்பாபு மரவனுார் டாஸ்மாக் கடையில் மது குடித்து, சதீஷின் 'புல்லட்' பைக்கில் ஊருக்கு கிளம்பிய அவர்கள், பிரிவு ரோட்டில் இருந்து மரவனுார் பைபாஸ் ரோட்டில் ஏறியபோது, சாலையை கவனிக்காமல் சென்றனர்.அப்போது, திருச்சியில் இருந்து மணப்பாறை நோக்கி வந்த, 'ஹோண்டா' கார், பைக்கின் பின்பக்கம் மோதியதில் மூவரும் துாக்கி வீசப்பட்டனர். சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதன்பாபு உயிருக்கு ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். மணப்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.