திருச்சி சாரதாஸில் சேமிப்பு திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 முதலீடு
திருச்சி: திருச்சி சாரதாஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு, சேமிப்பு என்ற சிந்தனையை ஊக்கப்படுத்தவும், முதலீட்டு துறையில் உள்ள நவீன முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டது. அதன்படி, திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தில், கடந்த ஜூலை 16ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை, 32 நாட்களில், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஜவுளிகள் வாங்கிய நபர்களில் தினமும் ஒருவர் வீதம், 32 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பெயரில் நீண்ட கால அடிப்படையில் சேமிப்பு திட்டத்தில் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டு, அதற்கான பத்திரங்கள் நேற்று வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன. ரம்யாஸ் தனியார் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில், முதலீடு திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு, நீண்ட கால சேமிப்பு பத்திரத்தை, நிறுவனத்தின் முதன்மை மேலாளர் தர்மலிங்கம் வழங்கினார். நிகழ்ச்சியில், ஆனந்த்ராஜ், முருகேசன், ஆதிபின்சர்வ் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.